Sunday, July 13, 2014

முழுமதி அறக்கட்டளையின் - பள்ளி புதுப்பிப்பு பணிகள் துவக்க விழா.

கடந்த ஓராண்டுகளாக முழுமதி நிர்வாகமும் , புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர் , கிராம பொதுமக்கள் ஆகியோர் ஆவலோடு எதிர்பார்த்திருந்த தருணம்..

முழுமதி அறக்கட்டளையின் பள்ளி சீரமைப்பு உதவிகள் துவக்க விழா.

நாள் : 15-07-2014
இடம் :திருவண்ணாமலை மாவட்டம் - போளூர் வட்டம் - சேத்துப்பட்டு ஒன்றியம் - புதுக்கரிக்காத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி.

இவ்விழாவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சுமார் ஓராண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலமாக எனக்கு நட்பானவர் அண்ணன் Ganesh Ezhumalai அவர்கள் . அவர் உலகலாவிய வலை மூலம் எனக்கு அறிமுகம் ஆனாலும் அவரின் சொந்த ஊர் எங்கள் ஊரில் இருந்து சுமார் 3 கி. மீ தொலைவில் உள்ள மாம்பட்டு கிராமமே. தற்போது ஜப்பானில் NIMS பல்கலைகழகத்தில் இளம் அறிவியல் ஆராய்ச்சியாளராக பயிற்சி பெற்று படித்துவருகிறார்.

இவர் முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Trust) நிர்வாக உறுப்பினராகவும் இருந்துவருகிறார். இவரும் இவரின் நண்பராக அண்ணன் Arul Ramalingam மற்றும் அண்ணன் Pari Velmuruganஅவர்களும் என்னை தொடர்பு கொண்டு முழுமதி அறக்கட்டளை பற்றிய உதவிகளை சொன்னார்கள். மேலும்,https://www.facebook.com/franklinmtp?fref=ts திரு. பிராங்ளின் அவர்களின் ராமபாளையம் பள்ளியை பற்றியும் கூறி ”தங்களின் பள்ளி மேம்பாட்டிற்கான உதவிகளை முழுமதி அறக்கட்டளை மூலமாக செய்துதர உள்ளோம்” என்று கூறினார்கள்.

மிக்க மகிழ்ச்சியான சூழலில் நான் என் தலைமை ஆசிரியரை அணுகிய போது அவரும் முழு ஒத்துழைப்பினையும் கிராம கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களின் வாயிலாக அளிப்பதாக சொல்லியிருந்தார். முழுமதி நிர்வாகத்தினரும் இப்பள்ளியை தேர்ந்தெடுக்க முன்வந்து பள்ளியை இரண்டு முறை நேராக வந்து பார்வையிட்டு தேவைகளை கேட்டறிந்து சென்றனர்.

இவற்றின் காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் , விளையாட்டு பொருட்கள் (விளையாட்டு மைதானம்) , மாணவர்கள் அமர வட்ட மேசைகள் , பள்ளிக்கு வண்ணம் பூசுதல் .. போன்றவற்றை முழுமதி அறக்கட்டளை சார்பாக செய்துதர உள்ளார்கள். அதற்கு முதற்படியாக சுமார் 18 ஆயிரம் செலவில் பள்ளி முழுமைக்கும் வண்ண பெயிண்ட் பூசும் பணிகள் தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

அதற்கும் மேலாக போளூரில் இருக்கும் படித்த இளைஞர்களை கொண்டு (கலை , அறிவியலில் புலமை பெற்றோர்) பள்ளி மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு வகையில் - பல்லூடக வாயிலாக - மாணாக்கர் அறிவினை பெருக்கும் ஒரு திட்டமும் இப்பள்ளியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்பள்ளியின் வளர்ச்சியில் நானும் ஒரு காரணமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இப்பள்ளியில் நான் இல்லை என்பதே சற்று வருத்தமாக உள்ளது.. (ஆனாலும் நானும் இம்மாணாக்கரின் அறிவு வளர்ச்சியில் காரணமாய் இனி இருப்பேன் என்பதில் பெருமிதமே) காரணம் தற்போது எனது சொந்த ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ளேன் என்பதால். ஆனால் எனக்கு பதிலாக என் நண்பர் Voorhees Shiva அங்கு தற்போது பணியில் உள்ளார்.

"நல்லதே நினைத்தால் ... நல்லதே நடக்கும் என்பது போல...” என் பள்ளி மாணவர்களுக்கான உதவிகள் தானாகவே முழுமதி அறக்கட்டளை மூலமாக வந்து சேர்ந்துவிட்டன. ஓராண்டுகால ஆயத்த பணிகளை முழுமதி நிர்வாகம் செய்து தற்போது துவக்க விழாவினை வரும் 15-07-2014 செவ்வாய்கிழமை நடத்த உள்ளது.


இந்த வேளையில் நான் ...

முழுமதி அறக்கட்டளை நிர்வாகிகள்

திரு. கணேஷ் ஏழுமலை
திரு. அருள் ராமலிங்கம்
திரு. பாரி வேல்முருகன்
திரு. செந்தில் கணபதி

உடன் முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Trust) நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிராம பொதுமக்கள் ... மாணவர்கள்... தலைமை ஆசிரியர் ... ஆகிறோர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



பள்ளியின் வண்ண பூச்சு படங்கள்...






















Saturday, November 16, 2013

மாணவர்களும் கல்வி நிலையும்.

குழந்தைகளுக்கு ABL மற்றும் SABL முறைகளோடு இணைந்த கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பள்ளியின் குழந்தைகளுக்கு கற்றலில் ஆர்வமானது அலாதியானது.

ஒரு நொடியை கூட வீணாக்க கூடாது என்பதில் மாணவர்களும் ஆசிரியர்களும் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் இப்பள்ளியின் கற்றல் திறனையும் கற்றல் ஆர்வத்தினையும் வியந்து பாராட்டி செல்வதுண்டு.

படித்தல் - எழுதுதல் - கணக்கீடுகளை செய்தல் எனும் முக்கிய திறன்களை மாணவர்களுக்கு வளர்ப்பதில் செயல்பாடுகள் முழு வீச்சில் அமைந்துள்ளன.


மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது 23 ஆண்டு அனுபவத்தில் இருந்து முறையான மற்றும் முழுமையான கற்றல் - கற்பித்தல் பணியினை ஆற்றி வருகிறார்.

தலைமை ஆசிரியர் 3,4,5 ஆகிய மூன்று வகுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.


உதவி ஆசியர் 1 மற்றும் 2 ஆகிய வகுப்புகளை கவனித்து வருகிறார்.

இப்பள்ளியில் சில குறிப்பிடத்தக்க மீத்திறன் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தனி கற்றல் முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.


இப்பள்ளியானது கடந்த மாதம் நடந்த சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்று தம் பள்ளியின் திறனை ஒன்றிய அளவில் காட்டி வந்தது.



மாவட்ட அளவில் இறுதி சுற்று வரை எங்கள் பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியில் போராடி ஆறுதல் பரிசை தட்டி வந்தனர்.

மாணவர்களுக்கு கல்வியோடு கலைதிறன் ஆர்வமும் தூண்டப்படுகிறது.



மாணவர்களுக்கு களப்பயண ஏற்பாடுகளும் அவ்வப்போது செய்யப்படுகின்றன.


ஆசிரியர்கள் விவரம்

 இப்பள்ளியானது ஈராசியர் பள்ளியாகும்..


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 

திரு. R. பரசுராமன் , M.A.M.Ed., D.T.Ed., அவர்கள்  இவர் கடந்த 25-07-2007 முதல் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சேத்துப்பட்டு ஒன்றிய தமிழ்நாடு துவக்கப்பள்ளி கூட்டணியின் செயலாளராகவும் உள்ளார்.


செல் - 948739488


உதவி ஆசிரியர் 

திரு. R. ஜெகநாதன் , B.Sc., B.Ed., D.T.Ed., அவர்கள்   இவர் கடந்த 17-12-2012 அன்று முதல் இப்பள்ளியின் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

செல் - 9894016112







மாணவ மாணவிகளின் விவரம்

வகுப்பு வாரியாக

முதல் வகுப்பு   3+4 = 7
இரண்டாம் வகுப்பு 8+4=12
மூன்றாம் வகுப்பு 3+2 = 5
நான்காம் வகுப்பு 4+4 = 8
 ஐந்தாம் வகுப்பு 4+1 = 5

மொத்த மாணவர்கள் = 22
மொத்த மாணவிகள் = 16

பள்ளியின் மொத்த மாண மாணவிகளின் எண்ணிக்கை 38


கடந்த ஐந்தாண்டுகளாக பள்ளியின் மாணவர் சேர்க்கை சீராக உயர்ந்து வருவதை காண முடிகிறது.

இதற்கான காரணமாக தமிழக அரசின் சிறப்பன திட்டங்களோடு . எங்கள் பள்ளி ஆசிரியர்களின் சீரிய பணியும் கருத்தில் கொள்ளத்தக்கது.

Friday, November 15, 2013

பிற கட்டிடங்களும் - வசதிகளும்

 குடிநீர் வசதி :

மாணவர்களுக்கு தனியான குடிநீர் வசதியானது இல்லை.

எனினும் கிராமபுற சூழலில் குழாய் தண்ணீர் எனப்படும் பழுப்பு மூலமான குடிநீரையே மக்களும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஓர் சிமண்டால் ஆன பழைய குடிநீர் தொட்டியே இதுநாள் வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பள்ளிக்கென தனியாக ஆழ்துளை குழாய் (போர்) மூலமாக தனியாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி வைக்ப்பட்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

 கழிவரை வசதிகள்

பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் பின் புறமாகவே ஒரு கழிவறை கட்டிடமானது மாணவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு தயாரிக்கும் கட்டிடம்

மதிய உணவு தயாரிக்க இது நாள் வரை வனத்துறை மானியத்தில் கட்டப்பட்ட சிறிய அளவிலான கட்டிடமானது இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய கட்டிடமாக 1.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர்

பள்ளி கட்டிடத்தினை சுற்றிலும் முழுமையான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கான மீதமுள்ள இடங்கள்:

பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் பின் புறம் சுமார் 50 ச.மீ பரப்பிற்கு ஓர் காலி இடம் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ளது.

பள்ளிக்கு அருகில் உள்ள பயன்படுத்தாத கட்டிடங்கள்.

10 ச.மீ பரப்பளவில் கிராம மக்களுக்கென உண்டாக்கப்பட்ட ஓர் தொலைக்காட்சி பெட்டி கட்டிடம் . நல்ல நிலையில் பயன்படுத்தப்படாத சூழலில் உள்ளது. இது வன இலாக்காவின் சார்பாக கட்டப்பட்ட கட்டிடமாகும்.


மின்னணு சாதனங்கள் விவரம்

இப்பள்ளியில் மின் வசதியானது அமைந்துள்ளது.

மேலும் 3 குழல் மின் விளக்குகள் 2 மின் விசிறிகள்  ஆகியனவும் அமைந்துள்ளது.

வண்ணத் தொலைக்காட்சிகள்  SSA மூலம் கொடுக்கப்பட்டது.

பெரியது 1 , சிறியது 2 

DVD player - 1

Radio with old Tape Recorder - 1






பள்ளி கட்டிடமும் - வகுப்பறை சூழலும்

பள்ளிக்குரிய மொத்த இடத்தின் பரப்பளவு - 454 ச.மீ.

இதில் 64 ச.மீ பரப்பளவில் வகுப்பறைகளானது அமைந்துள்ளது.

வகுப்பறையானது 1 முதல் 5 வகுப்புகளுக்கும் ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ளது.





இடையில் தட்டி எனப்படும் . மூங்கிலால் ஆன தடுப்பு ஒன்று வைக்கப்பட்டு ஒரு புறம் 1 மற்றும் 2 வகுப்புகளுக்கும்.


மற்றொருபுறம் 3 முதல் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்படுகிறது.


பள்ளி வகுப்பறையின் மொத்த பரப்பளவு 64 ச.மீ என்பதால் ஒரு ச.மீ பரப்பிற்கு ஒரு மாணவர் என்ற வீதத்தில் மொத்தம் 64 மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவான ஓர் இடமாக இப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு இடம் 64 ச.மீ பரப்பில் பள்ளிக்கு முன்புறமாக அமைந்துள்ளது.


முகவுரை.

புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளியானது .

இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில்

திருவண்ணாமலை மாவட்டம்

போளூர் வட்டம்

சேத்துபட்டு ஊராட்சி ஒன்றியம்

கரிகாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது

புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளி ஆகும்.


இது 12-03-2001 அன்று புதிதாக துவங்கப்பட்ட துவக்கப்பள்ளி.


இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை - (ஆண்கள் 209+ பெண்கள் 223 = மொத்தம் 432)

இதன் அமைவிடம் google map ல்... 12.543505, 79.187069

இந்த பள்ளியானது போளூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இதன் அருகில் கரிகாத்தூர் எனும் சற்று பெரிய கிராமம் அமைந்துள்ளது.

கரிக்காத்தூரில் இருந்து இது ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் கரிக்காத்தூர் வரை மட்டுமே மினி பேருந்துகள் எனப்படும் கிராம பேருந்துகள் வந்து செல்லும்.


இக்கிராம மக்களின் முயற்சியால் இக்கிராமத்திற்கென தனியாக இப்பள்ளியானது 2001 ஆம் ஆண்டு புதிதாக துவங்கப்பட்டது.