Saturday, November 16, 2013

மாணவர்களும் கல்வி நிலையும்.

குழந்தைகளுக்கு ABL மற்றும் SABL முறைகளோடு இணைந்த கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பள்ளியின் குழந்தைகளுக்கு கற்றலில் ஆர்வமானது அலாதியானது.

ஒரு நொடியை கூட வீணாக்க கூடாது என்பதில் மாணவர்களும் ஆசிரியர்களும் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் இப்பள்ளியின் கற்றல் திறனையும் கற்றல் ஆர்வத்தினையும் வியந்து பாராட்டி செல்வதுண்டு.

படித்தல் - எழுதுதல் - கணக்கீடுகளை செய்தல் எனும் முக்கிய திறன்களை மாணவர்களுக்கு வளர்ப்பதில் செயல்பாடுகள் முழு வீச்சில் அமைந்துள்ளன.


மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது 23 ஆண்டு அனுபவத்தில் இருந்து முறையான மற்றும் முழுமையான கற்றல் - கற்பித்தல் பணியினை ஆற்றி வருகிறார்.

தலைமை ஆசிரியர் 3,4,5 ஆகிய மூன்று வகுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.


உதவி ஆசியர் 1 மற்றும் 2 ஆகிய வகுப்புகளை கவனித்து வருகிறார்.

இப்பள்ளியில் சில குறிப்பிடத்தக்க மீத்திறன் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தனி கற்றல் முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.


இப்பள்ளியானது கடந்த மாதம் நடந்த சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்று தம் பள்ளியின் திறனை ஒன்றிய அளவில் காட்டி வந்தது.



மாவட்ட அளவில் இறுதி சுற்று வரை எங்கள் பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியில் போராடி ஆறுதல் பரிசை தட்டி வந்தனர்.

மாணவர்களுக்கு கல்வியோடு கலைதிறன் ஆர்வமும் தூண்டப்படுகிறது.



மாணவர்களுக்கு களப்பயண ஏற்பாடுகளும் அவ்வப்போது செய்யப்படுகின்றன.


No comments:

Post a Comment